Vijay: விஜய்யின் பீஸ்ட் ஏப்ரல் 14 வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் வெளியாக வேண்டிய படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் தள்ளி வெளியானதால், பீஸ்ட் படமும் தள்ளிப் போகும் என்ற வதந்தி உலவுகிறது.
நடிகர் விஜய் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் மூவரும் இடம் பெற்றுள்ளனர்.
விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். அதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதற்கு முன் வெளியான திரைப்படம் பிகில். அதன் இயக்குனர் அட்லி.
இவர்கள் மூவரும் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் இணையத்தில் பகிர்ந்திருந்தார். புகைப்படத்தை எடுத்தவர் விஜய் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இன்றைய தேதியில் தமிழின் மோஸ்ட். வான்டட் இயக்குனர்கள் இந்த மூவரும். இவர்கள் ஒன்றாக ஒரு பிரேமில் சிக்குவது அபூர்வம். அந்தப் புகைப்படத்தை விஜய் எடுத்தார் என்பது கூடுதல் விசேஷம். ரசிகர்கள் பெருமளவில் பகிர்வதால் இணையத்தில் இந்தப் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.
விஜய்யின் பீஸ்ட் ஏப்ரல் 14 வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் வெளியாக வேண்டிய படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் தள்ளி வெளியானதால், பீஸ்ட் படமும் தள்ளிப் போகும் என்ற வதந்தி உலவுகிறது. ஆனால், ஏப்ரல் 14 பீஸ்டை வெளியிடுவதில் சன் பிக்சர்ஸ் உறுதியாக உள்ளது. விரைவில் அவர்கள் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.