இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான சிம்ப்ளி ஃப்ளை என்ற புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.
அதேபோல் ஆஸ்கர் போட்டியில் பொதுப்பிரிவில் பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் படக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். அதன்படி ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.
உலகின் பல நாடுகளிலிருந்து 1000 திரைப்படங்கள் பொதுப்பிரிவில் போட்டியிட குவிந்த நிலையில் அனைத்தையும் பார்த்துவிட்டு அதிலிருந்து இறுதிப்பட்டியலை ஆஸ்கர் குழுவினர் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டனர். 366 படங்கள் கொண்ட இறுதி பட்டியலில் சூரரைப்போற்று படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய 3 பிரிவுகளில் இடம்பிடித்திருந்தது. இதையறிந்து படக்குழுவினரும், ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு தற்போது இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் எந்த பிரிவிலும் தேர்வாகவில்லை. ஆனாலும், ஓடிடியில் வெளியாகி ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட, முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.