முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: ’ஏன்டா நடிக்க வந்தோம் என இருந்தது’ : ’வதந்தி’ செய்தியாளர் சந்திப்பில் எஸ்.ஜே.சூர்யா பேச்சு!

WATCH: ’ஏன்டா நடிக்க வந்தோம் என இருந்தது’ : ’வதந்தி’ செய்தியாளர் சந்திப்பில் எஸ்.ஜே.சூர்யா பேச்சு!

வதந்தி படக்குழுவினர்

வதந்தி படக்குழுவினர்

SJ Suryah | எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள வதந்தி தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம்யில் வெளியாகிறது.

  • Last Updated :
  • Chennai, India

வதந்தி படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் நாசர், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, லைலா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய நடிகர் எஸ்.ஜே சூர்யா, இயக்குனராக இருந்த சமயத்தில் நடிக்க வந்த நமக்கு என்னடா இப்படி இருக்கிறதே என்ற ஆதங்கம் இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் சர்வதேச அளவில் எல்லைகளை உடைத்து சாதிக்க வேண்டுமென்ற ஆசை இருந்ததாகவும்,  அது தற்போது வதந்தி மூலமாக நிறைவேறி இருப்பதாகவும் கூறினார். வதந்தி இணையத் தொடரை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ், தன்னுடன் வாலி திரைப்படத்திலிருந்து நியூ திரைப்படம் வரை உதவி இயக்குனராக பணியாற்றினார். சர்வதேச அளவில் எல்லைகளைக் உடைத்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை தன்னுடைய உதவியாளர் மூலம் நிறைவேறி இருப்பதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க:

' isDesktop="true" id="843529" youtubeid="1StHrYfmvOY" category="cinema">

இந்த  தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

First published:

Tags: SJSurya