எஸ்.பி.பி உடல்நிலை எப்படி இருக்கிறது..? மருத்துவமனையின் சமீபத்திய அறிக்கை
எஸ்.பி.பி உடல்நிலை எப்படி இருக்கிறது..? மருத்துவமனையின் சமீபத்திய அறிக்கை
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்த இன்றைய அறிக்கை மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக எஸ்பிபி உடல்நிலை, சீராக உள்ளது என்று அவரின் மகன் சரண் தெரிவித்திருந்தார். இது தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், அனைவரது பிரார்த்தனைகளும் தங்களுக்கு உதவியதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், தனது தந்தைக்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் எஸ்.பி.பி.சரண் கூறியிருந்தார்.
இன்று காலை பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்ததாக தகவல் வெளியான நிலையில், அவர் இன்னும் வெண்டிலேட்டர் எக்மோ கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தற்போது எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி. தொடர்ந்து எக்மோ, செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.