முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கவிஞர் வைரமுத்துவின் மகளிர் தின வாழ்த்துக்கு பாடகி சின்மயி பதில்!

கவிஞர் வைரமுத்துவின் மகளிர் தின வாழ்த்துக்கு பாடகி சின்மயி பதில்!

வைரமுத்து - சின்மயி

வைரமுத்து - சின்மயி

இவர் எப்படி பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கவிதை நடையிலேயே அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின கவிதை ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அவரது பதிவில்,

மாலையும் நகையும்

கேட்கவில்லை பெண்;

மதித்தல் கேட்கிறாள்

வீடும் வாசலும்

விரும்பவில்லை பெண்;

கல்வி கேட்கிறாள்

ஆடம்பரம் அங்கீகாரம்

ஆசைப்படவில்லை பெண்;

நம்பிக்கை கேட்கிறாள்

கொடுத்துப் பாருங்கள்;

அவளே பாதுகாப்பாள்

ஆண்களையும்

உலக

மகளிர் திருநாள் வாழ்த்து

என்று பதிவிட்டுள்ளார்.

அவருக்கு பதிலளித்துள்ள சின்மயி, அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண். பாதுகாப்பு கேட்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்: நியாயம் கேட்கிறாள்.

இவர் எப்படி பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கவிதை நடையிலேயே அவருக்கு ட்விட்டரில் பதில் கொடுத்திருக்கிறார்.

First published:

Tags: Chinmayi sripaada, Vairamuthu