முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘ஈஸ்வரன்’ டப்பிங்கை முடித்த சிம்பு - வாய் மேல் விரல் வைத்த ரசிகர்கள்

‘ஈஸ்வரன்’ டப்பிங்கை முடித்த சிம்பு - வாய் மேல் விரல் வைத்த ரசிகர்கள்

ஈஸ்வரன் படத்தில் சிம்பு

ஈஸ்வரன் படத்தில் சிம்பு

‘ஈஸ்வரன்’ படத்தின் டப்பிங்கை முடித்திருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிம்புவின் 46-வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மாதம் தொடங்கிய ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு 40 நாட்களில் முடிவடைந்தது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வந்த நிலையில் நடிகர் சிம்பு ‘ஈஸ்வரன்’ படத்தின் டப்பிங்கை முடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்புக்கு சரிவர வருவதில்லை, சிம்பு தயாரிப்பாளர்களை இழுத்தடிப்பார், ஒரு படம் முடிக்க இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்வார் என்று தன்னைப் பற்றி பல்வேறு தகவல்கள் கோலிவுட்டில் வலம் வரும் நிலையில் 40 நாட்களில் முழுப்படத்தையும் முடித்து கொடுத்து அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சிம்பு.

அதிரடியாக உடலைக் குறைத்து, 40 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தை முடித்துக் கொடுத்த சிம்புவின் அர்ப்பணிப்பை பார்த்து வாய் மேல் விரல் வைத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். மேலும் தொடர்ந்து இதேபோல் திரைப்படங்களில் சிம்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தங்களது எண்ணத்தை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வரும் ரசிகர்கள், தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘ஈஸ்வரன்’ டீசரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

முன்னதாக படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி அனைவரையும் சிலம்பரசன் மகிழ்வித்தார். மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கினார்.

First published:

Tags: Eeswaran Movie, Simbu