இயக்குநரும் நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து முன்பே ட்விட்டரில் சூசகமாக குறிப்பிட்டதாக, அவரது பதிவொன்று வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை இரவு அறிவித்தனர். இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர்.
அந்த அறிக்கையில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
Dhanush: நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்...
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?
இதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். அந்த அறிக்கையின் கமெண்டுகளில் ரஜினி ரசிகர்களும், தனுஷ் ரசிகர்களும் தங்கள் அதிருப்தியை காட்டினர். தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைய வேண்டுமென சில பிரபலங்களும் கருத்து தெரிவித்தனர்.
Dhanush Aishwarya: அக்கா ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்த செளந்தர்யா ரஜினிகாந்த்!
இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து இயக்குநர் செல்வராகவன் முன்பே சூசகமாக ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாக, அவரது பதிவொன்று கவனம் பெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 3-ம் தேதி அவர் வெளியிட்டிருந்த பதிவில், “தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
— selvaraghavan (@selvaraghavan) December 3, 2021
தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்குமிடையேயான பிரச்னை உச்சத்தில் இருக்கும் போது தான், செல்வராகவன் இவ்வாறு பதிவிட்டிருக்கக் கூடும் என்கிறார்கள் நெட்டிசன்கள். தவிர அவர் சமீபமாக வாழ்க்கை தத்துவங்களை அதிகமாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush, Director selvaragavan