முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''மதம் அல்ல மனிதம்''.. அயோத்தி திரைப்படம் குறித்து பேசிய சசிகுமார்!

''மதம் அல்ல மனிதம்''.. அயோத்தி திரைப்படம் குறித்து பேசிய சசிகுமார்!

அயோத்தி திரைப்படம்

அயோத்தி திரைப்படம்

அயோத்தி திரைப்படம் மதம் சார்ந்தது அல்ல, மனிதம் சார்ந்தது என படத்தின் நாயகன் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

‘காரி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிக்கும் படம் ‘அயோத்தி’. இந்தப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். ட்ரைன் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு அயோத்தி என தலைப்பு வைத்திருப்பதால் மதம் சார்ந்த திரைப்படமாக இருக்க வாய்ப்புள்ளது என கருத்துக்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் படத்தின் நாயகன் சசிகுமார் அயோத்தி மதம் சார்ந்த திரைப்படம் அல்ல, மனிதம் சார்ந்த திரைப்படம் என கூறியுள்ளார்.

இந்தத் திரைப்படத்திற்கு பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து சற்று மாறுபட்டு இந்த படத்திற்கான கதை எழுதப்பட்டுள்ளது. மதத்தின் நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் ஒரு மனிதனின் மாற்றமே இந்த படத்தின் கதை. இதற்கு முதலில் அப்துல் காதர் என தலைப்பு வைத்திருந்தனர் ஆனால் சில காரணங்களால் படத்திற்கு அயோத்தி என தலைப்பை மாற்றி படத்தை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sasikumar