முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வாங்கோ வாங்கோ ஒண்ணாகி... என்ஜாய் எஞ்சாமி சர்ச்சைக்கு சந்தோஷ் நாராயணன் விளக்கம்!

வாங்கோ வாங்கோ ஒண்ணாகி... என்ஜாய் எஞ்சாமி சர்ச்சைக்கு சந்தோஷ் நாராயணன் விளக்கம்!

தீ - அறிவு - சந்தோஷ் நாராயணன்

தீ - அறிவு - சந்தோஷ் நாராயணன்

பாடலின் மொத்த வருமானமும், உரிமைகளும் தீ, அறிவு மற்றும் நான் மூவரும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் என்ஜாய் எஞ்சாமி பாடல், பாடகர் அறிவு இல்லாமல் பாடப்பட்டதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இப்பாடல், யூ-ட்யூபில் இதுவரை 429 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் தயாரித்திருந்த இந்தப் பாடல், ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜ்ஜா தளத்தில் வெளியானது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் என்ஜாய் எஞ்சாமி பாடல் பாடப்பட்டது. அதனை பாடகிகள் தீ-யும், கிடாக்குழி மாரியம்மாளும் பாடினர். மேடையில் அறிவு இல்லாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

தூங்கும்போது தான் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படும், இறுதியில் உண்மை வெல்லும் - என்ஜாய் எஞ்சாமி பாடகர் அறிவு

இதையடுத்து தனது சமூக வலைதளங்களில், “இப்பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுகள் தரவில்லை, ஒரு வார்த்தையைக்கூட யாரும் தரவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களாக தூங்காமல் கடுமையாக இதற்காக உழைத்திருக்கிறேன்.

நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன, விழித்திருக்கும்போது அல்ல. ஜெய்பீம். கடைசியில் உண்மை தான் எப்போதும் வெல்லும்” என்று பதிவிட்டிருந்தார் பாடகர் அறிவு. இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.




 




View this post on Instagram





 

A post shared by Arivu (@therukural)



இந்நிலையில் தற்போது இந்த சர்ச்சை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அதில், “என்னுடைய நண்பர்கள், பின்தொடர்பாளர்கள், நலம் விரும்பிகள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 2012-ல் அறிமுகமான எனக்கு கடந்த 10 வருடங்களாக உங்கள் அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்குவதற்கு நன்றி. நான் இப்போது வேறு மொழியில் 'indie' இசையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இதில்தான் என் முழு கவனத்தையும் நேரத்தையும் செலவிடுகிறேன்.

இப்போது என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து பேச விரும்புகிறேன்.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வேர்களையும், இயற்கையையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் `என்ஜாயி என்ஜாமி' பாடலை கம்போஸ், புரோகிராமிங் மற்றும் ரெக்கார்டிங் செய்து கோ சிங்கராக பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் `தயாரிப்பாளர்' என்று குறிப்பிடப்படுகிறது. இதை independent space-ல் பலர் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள்.

சென்னை வேண்டாம்... முடிவை மாற்றிய வாரிசு குழுவினர்

நான், தீ, அறிவு மூவரும் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் அன்பிற்காகவும், இண்டிபெண்டெண்ட் இசை மேல் எங்களுக்கு உள்ள காதலாலும் ஒன்றாக இணைந்தோம்.

தீ மற்றும் அறிவு பாடலைப் பாட ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் சேர்ந்து பாடலுக்காக பணியாற்றினார்கள். தீ-யின் பல வரிகளுக்கு அவரே இசையமைத்தார். அறிவு பாடல்கள் எழுத ஒப்புக்கொண்டார். நான் மீதி இசையையும், அறிவு பகுதிக்கான ட்யூனையும் கம்போஸ் செய்தேன். இந்தப் பாடலுக்கான அடித்தளத்தை மிக நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, பாடலுக்கான ஓட்டத்தையும், திரைக்கதையையும் உருவாக்கி, பல நிஜ வாழ்க்கைக் கதைகளைக் கூறி அறிவுடன் பல மணி நேரம் செலவழித்த இயக்குநர் மணிகண்டனுக்கு (காக்கா முட்டை, கடைசி விவசாயி) எங்கள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அற்புதமான திரைப்படமான 'கடைசி விவசாயி' தான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேசன்.

பாடலில் உள்ள ஒப்பாரி வரிகள் அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பாட்டிகள் மற்றும் தாத்தாக்களின் பங்களிப்பாகும். அவர்களின் பணியை கௌரவித்த அறிவுக்கு நன்றி. ’பந்தலுல பாவக்கா’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய ஒப்பாரி பாடல்களில் ஒன்று.

இணையத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட சண்டைக் காட்சி!

ரகிட ரகிட, அம்மா நானா, என்னடி மாயாவி போன்ற எனது பல பாடல்களைப் போலவே, நான் இசையமைக்கும் பாடலில் நானே சில வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். அவற்றில் 'என்ஜாயி என்ஜாமி'யும் ஒன்று. என்னுடைய இந்த பொருத்தமற்ற சொற்றொடரை மையப்படுத்தி அறிவு ஒரு அற்புதமான வரிகளை உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பாடலின் முழு உருவாக்கமும் 30 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்பு என்ஜாயி என்ஜாமியை பதிவு செய்ய சில மணிநேரங்களே இருந்ததால், எங்களின் பணி வேகமாகவும், ஃபன்னாகவும் இருந்தது.

' isDesktop="true" id="779948" youtubeid="eYq7WapuDLU" category="cinema">

இந்தப் பாடலின் மொத்த வருமானமும், உரிமைகளும் தீ, அறிவு மற்றும் நான் மூவரும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம். கலைஞர்கள் தீ, அறிவு இருவருக்கும் பக்கபலமாக நின்று எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் எந்தவொரு பாரபட்சமின்றியும் அவர்களுக்கு கிரெடிட் கொடுத்துள்ளேன். என்ஜாயி என்ஜாமி ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய எனது பேச்சு அதற்கு சாட்சி.

செஸ் ஒலிம்பியாட் 2022-ல் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாளின் என்ஜாயி எஞ்சாமி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, வெளிநாட்டில் இருந்ததால் அறிவால் அதில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும் அவரது தற்போதைய அமெரிக்க பயணத்திட்டம் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அறிவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் 'அனல் மேலே பனித்துளி' திரைப்படத்தில் நான் இசையமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் "கீச்சே கீச்சே" பாடல். 'என்ஜாய் எஞ்சாமி' பாடலுக்கு கொடுத்த அதே அன்பை 'கீச்சே கீச்சே' படத்திற்கும் கொடுத்தால் அது கலைஞனாக அறிவுக்கு பொருத்தமாக இருக்கும்.

மக்கள் தொகைக்கு ஏற்கனவே பங்களித்து விட்டோம் - கர்ப்பம் குறித்த வதந்திக்கு கரீனா கபூர் பதிலடி

ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்காக எனது தளத்தை நான் எப்போதும் பயன்படுத்தியிருக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலை இரண்டுமே அதற்குச் சான்றாகும். எனது வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் பின்பற்றும் பணி நெறிமுறை, கலாசாரம் மற்றும் தோழமை ஆகியவை அதற்கு சாட்சி. கலையின் மீதும், நம் நாட்டில் உள்ள அனைத்து அற்புதமான கலைஞர்களின் மீதும் மட்டுமே அன்பு கொண்டுள்ளேன். வரும் மாதங்களில் உலகளவில் பல புதிய தமிழ் குரல்களின் எழுச்சியைக் காண்போம்!

இந்த பாடல் உருவாக உதவியாக இருந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த சிறப்பு பாடலில் ஈடுபட்டுள்ள எவருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன். மேலும் கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைப்பதே எனது குறிக்கோள்!

வாங்கோ வாங்கோ ஒண்ணாகி!” என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Music director santhosh narayanan