முகப்பு /செய்தி /entertainment / மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன் - நடிகர் ரஜினிகாந்த் உறுதி

மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன் - நடிகர் ரஜினிகாந்த் உறுதி

மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

Rajinikanth Respect Late Actor Mayilsamy Body | மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மறைந்த நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை கட்டாயம் நிறைவேற்றுவேன் என அவரது  உடலுக்கு அஞ்சலி செலுத்தி பின்னர் நடிகர் ரஜினிகாந்த் உறுதி அளித்தார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும் நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்ற நடிகர் மயில்சாமி  மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்துகொண்டார். கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு இல்லம் திரும்பியுள்ளார். காலை 4 மணிக்கு அவருக்கு பசி எடுத்துள்ளது. அப்போது இட்லி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகுதான் நெஞ்சு வலிக்கிறது என்று கூறியுள்ளார்.

குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அவரது உடல் சென்னை சாலிகிராமத்திலுள்ள இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது. மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சிவராத்திரி விழாவுக்காக கர்நாடக மாநிலம் சென்று இன்று சென்னை திரும்பிய ரஜினி காந்த் மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் வைக்கப்பட்ட சாலிகிராமம் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது மகன்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமி மிமிக்கிரி செய்து நடிகனராக மாறியவர் என்றும் அவர் ஒரு மிகச்சிறந்த சிவபக்தர் என கூறினார். என்னை மயில்சாமி சந்திக்கும்போதேல்லம் எம்ஜிஆர், சிவனை பற்றி மட்டுமே பேசுவார் என்றார். மயில்சாமியின் கடைசி ஆசையை பற்றி நான் கேள்வி பட்டேன் இது பற்றி டிரம்ஸ் சிவமனியிடன் நான் பேசுவேன் என்றும் மேகநாதேஸ்வரன் திருக்கோவிலின் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்வேன் என ரஜினிகாந்த்உறுதி அளித்தார்.

சிவன் கோவிலுக்கு விவேக் சாரை  அழைத்து வந்திருக்கிறேன் ட்ரம்ஸ் சிவமணியும் அழைத்து வந்துவிட்டேன் அதுபோல நடிகர் ரஜினிகாந்தையும் சிவன் கோவிலுக்கு அழைத்து வர வேண்டும் என்பது தான் மயில்சாமியின் ஆசை என நேற்று டிரம்ஸ் சிவமணி கூறியிருந்தார். நடிகர் மயில்சாமியின் உடல், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது.

First published:

Tags: Mayilsamy, Rajinikanth