முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கடவுள் இல்லையென்கிறார்கள்... ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியுமா ? - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

கடவுள் இல்லையென்கிறார்கள்... ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியுமா ? - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நான் அந்த சமயத்தில் வெளியே சென்றால் உடல் நலம் பாதிக்கும் என மருத்துவர் கூறியதால் மட்டுமே அரசியலில் இருந்து விலகினேன். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் 90 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் துவங்கின.

இதனையடுத்து லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை ரஜினிகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து சென்னை தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ''நான் அரசியல் பணியில் ஈடுபடும்போது கொரோனா 2வது அலை தொடங்கிவிட்டது. நான் அந்த சமயத்தில் வெளியே சென்றால் உடல் நலம் பாதிக்கும் என மருத்துவர் கூறியதால் மட்டுமே அரசியலில் இருந்து விலகினேன். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியாது என தெரிந்தும், சிலர் கடவுள் இல்லை என்று கூறுகின்றனர்'' என்று பேசினார்.

First published:

Tags: Rajinikanth