‘தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக நடிகர் ரஜினிகாந்த் அக்டோபர் 8-ஆம் தேதி சாலை மார்க்கமாக தனது காரில் ஹைதராபாத் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
மற்ற நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அங்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ‘அண்ணாத்த’படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். கொரோனா பிரச்னை முடிந்த இயல்புநிலை திரும்பிய பின்னரே ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியான நிலையில் அதற்கு முன்னதாகவே அவர் கலந்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘அண்ணாத்த’ திரைப்படம் கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.