கள்ளக்குறிச்சியில் இறந்த மாணவிக்கு நீதி வேண்டுமென ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாணவி மரணத்தில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தை கைது செய்யக்கோரி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்த சிறுமிக்கு ஆதரவாக நடிகர் ஹரிஷ் கல்யாண் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால் எந்த தமிழ் நடிகையும் இது குறித்து பேசவில்லையே என இருந்த நெட்டிசன்கள் முகத்தில் புன்னகையை விதைத்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்த மாணவிக்கு நீதி வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த பிரச்சனையை தைரியமாக பேசிய ஒரே தமிழ் நடிகை என்று நெட்டிசன்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வாய்ப்பளித்ததற்கு நன்றி ப்ரோ... மோகன் ஜி-யை புகழ்ந்த இயக்குநர் செல்வராகவன்!
தமிழ் பெண்ணான பிரியா பவானி சங்கர், செய்தி வாசிப்பாளராக தனது கரியரை தொடங்கினார். பின்னர் சீரியல் நடிகையாகி ரசிகர்களிடம் ரீச் ஆனார். இதையடுத்து தமிழ் சினிமாவின் நடிகையான அவர், தற்போது, 'திருச்சிற்றம்பலம்', 'அகிலன்', 'பொம்மை', 'ருத்ரன்', 'பத்து தலை', 'இந்தியன் 2' மற்றும் 'குருதி ஆட்டம்' ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.