முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மனைவியுடன் சண்டையா? டிக்டாக் ரமேஷ் உயிரிழப்பில் தொடரும் விசாரணை..!

மனைவியுடன் சண்டையா? டிக்டாக் ரமேஷ் உயிரிழப்பில் தொடரும் விசாரணை..!

கடந்த 27-ம் தேதி அன்று மாலை ரமேஷ் தனது குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 27-ம் தேதி அன்று மாலை ரமேஷ் தனது குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 27-ம் தேதி அன்று மாலை ரமேஷ் தனது குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டிக்டாக் பிரபலம் ரமேஷை அவரது மனைவி தாக்கும் வீடியோவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பில் வசித்து வருபவர் டான்சர் ரமேஷ். இவர் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு பிரபலமடைந்தார். தொடர்ச்சியாக பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடனமாடி ரமேஷ் பாராட்டுகளை பெற்றார்.

அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் ரஜினி வெளிவர உள்ள ஜெயிலர் படத்திலும் சிறிய வேடங்களில் ரமேஷ் நடித்து பிரபலமடைந்தார். இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி அன்று மாலை ரமேஷ் தனது குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்தது.

இந்நிலையில், உயிரிழந்த ரமேஷின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், அடி தாங்க முடியவில்லை என ரமேஷ் கூறுவதும், அவரது இரண்டாவது மனைவி இன்பவல்லி கையில் உருட்டுக்கட்டை ஒன்றை வைத்திருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து பேசின் பிரிட்ஜ் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Also read... நகைச்சுவையில் முடிசூடா மன்னன்... நடிகர் நாகேஷ் நினைவு தினம் இன்று!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: