CINEMA PM MODI CONGRATULATES THALAIVA RAJINIKANTH CALLS HIM AN ENDEARING PERSONALITY VAI
Rajinikanth | ரஜினிகாந்தை ’தலைவா’ என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி
பிரதமர் மோடி - ரஜினிகாந்த்
பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் விருது பெற்றதையடுத்து 'தலைவா' என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1966-ம் ஆண்டு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு 2010-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் மூன்றாவது நபராக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் வழங்கப்படுவதாக இன்று அறிவித்தார். இதனையடுத்து விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Popular across generations, a body of work few can boast of, diverse roles and an endearing personality...that’s Shri @rajinikanth Ji for you.
It is a matter of immense joy that Thalaiva has been conferred with the Dadasaheb Phalke Award. Congratulations to him.
அந்த வாழ்த்து செய்தியில்: தலைமுறைகளைக் கடந்து தன்னுடைய மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகர் ரஜினிகாந்த், ஒருசிலரின் பணிகள் தனித்துவமானவை, மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் அன்பைப் பெற்றவர். தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.