அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான பன்றிக்கு நன்றி சொல்லி பிப்ரவரி 4-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.
வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்த திரைப்படங்கள் தமிழில் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. சென்ற வருடம் வெளிவந்த ராக்கி , கடைசீல பிரியாணி திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தந்த படங்களாக அமைந்தன. அதே போன்ற வித்தியாசமான கதைக் களத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம்தான் பன்றிக்கு நன்றி சொல்லி. இந்தப் படத்தை பாலா அரன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் திரைப்படங்களை இயக்கிய நலன் குமாரசாமிதான் இந்த திரைப்படத்திற்கு பின்னிருக்கும் சூத்திரதாரி.
பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படம் புதையல் வேட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு கோடி பணமும், ஒரு புராதன சிலையும் தேடி சிலர் நடத்துகிற வேட்டைதான் பன்றிக்கு நன்றி சொல்லி கதை. விறுவிறுப்பான கதையும் காட்சிகளும் வசனங்களும் அபத்த நகைச்சுவையும் கலந்து இந்த படத்தை பாலா அரன் எடுத்துள்ளார்.
Also read... ஹன்சிகாவின் நாயகி மைய திரைப்படம் - தயாரிப்பாளர் யார் தெரியுமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment