நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் கிருத்தி ஷெட்டி (Krithi Shetty) நாயகியாக நடிக்கிறார்.
மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் அந்தப் படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.
இதற்காக தன்னுடைய குழுவினருடன் வெங்கட்பிரபு அங்கு முகாமிட்டுள்ளார். கதை விவாத பணிகளை முடித்திருக்கும் படக்குழுவினர், நடிகர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதில் முதல் கட்டமாக கிருத்தி ஷெட்டி படத்தில் நாயகியாக நடிப்பதாக அறிவித்திருக்கின்றனர். மேலும் அடுத்தடுத்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகின்றன. தமிழ் திரையில் பிரபல இயக்குநராகவும், வெற்றி இயக்குநராகவும் அறியப்படும் வெங்கட்பிரபு, தற்போது நேரடி தெலுங்கு படத்தை இயக்குகிறார். இதனால் கதை விவாதத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளார் என கூறுகின்றனர்.
நாகசைதன்யா திரைப்படத்தை முடிந்த பிறகு தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். வெங்கட்பிரபு - நாகசைதன்யா படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கும் கிருத்தி ஷெட்டி லிங்குசாமி இயக்கி வரும் தி வாரியர் பாலா சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.