முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மம்முட்டி மற்றும் பிரித்விராஜ்க்கு நன்றி தெரிவித்த மணிரத்னம்!

மம்முட்டி மற்றும் பிரித்விராஜ்க்கு நன்றி தெரிவித்த மணிரத்னம்!

மணிரத்னம்

மணிரத்னம்

நேற்று கேரளாவில் பொன்னியின் செல்வன் படத்தின் புரோமஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் மம்முட்டி மற்றும் பிரித்விராஜிற்கு நன்றி தெரிவித்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் மம்முட்டி மற்றும் பிரித்விராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் இறங்கி இருக்கின்றனர். அதில் முதல் கட்டமாக சென்னையில் சனிக்கிழமை முதல் புரோமோஷனல் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தற்போது வெளி மாநிலங்களுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதில் திருவனந்தபுரம், பெங்களூர், ஐத்தராபாத், டெல்லி, மும்பை ஆகிய  இடங்களுக்கு அடுத்தடுத்து அவர்கள் செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று கேரளாவில் பொன்னியின் செல்வன் படத்தின் புரோமஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் மம்முட்டி மற்றும் பிரித்விராஜிற்கு நன்றி தெரிவித்தார். காரணம், ஒவ்வொரு மொழியிலும் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு அந்த மொழிகளில் உள்ள பிரபல நடிகர்கள் டிரெய்லர் மற்றும் படத்திற்காக குரல் கொடுத்துள்ளனர்.

Also read... திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

அந்த வகையில் இந்தப் படத்தின் மலையாள டிரெய்லருக்கு நடிகர் பிரித்விராஜ் குரல் கொடுத்திருந்தார். மேலும் மலையாள வெர்ஷனில் படம் ஆரம்பிக்கும் போது அதன் கதையை சொல்லி படத்தை துவங்கி வைக்கும் விதமாக நடிகர் மம்முட்டி அதற்கு குரல் கொடுத்துள்ளார்.

இந்த காரணங்களுக்காக தான் இயக்குநர் மணிரத்னம் நிகழ்ச்சியின் போது அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Mammootty, Mani ratnam