முகப்பு /செய்தி /entertainment / மயில்சாமி உடலுக்கு சிவபுராணம் இசைத்து அஞ்சலி செலுத்திய சிவனடியார்கள்!

மயில்சாமி உடலுக்கு சிவபுராணம் இசைத்து அஞ்சலி செலுத்திய சிவனடியார்கள்!

மயில்சாமி

மயில்சாமி

Actor Mayilsamy Passes Away | சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் இன்று காலை நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மறைந்த நடிகர் மயில்சாமி சிவன் பக்தர் என்பதால் அவரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறும் நிலையில் அவருடைய இல்லத்தில் சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்தனர்.

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும் நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்ற நடிகர் மயில்சாமி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்துகொண்டார். கோயிலுக்கு சென்றுவிட்டு அதிகாலை 3:30 மணிக்கு இல்லம் திரும்பியுள்ளார். காலை 4 மணிக்கு அவருக்கு பசி எடுத்துள்ளது. அப்போது இட்லி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகுதான் நெஞ்சு வலிக்கிறது என்று கூறியுள்ளார்.

குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அவரது உடல் சென்னை சாலிகிராமத்திலுள்ள இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது. மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் மயில்சாமியின் உடல், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் இன்று காலை தகனம் செய்யப்படுகிறது. இதையொட்டி, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட உள்ளது.

தீவிர சிவபக்தரான மயில்சாமி, சிவராத்திரி விழாவின் போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு செல்லாமல் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதீஸ்வரர் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு சென்றிருக்கிறார். பின்னர் கோவிலில் இருந்து வீடு திரும்பிய நெஞ்சுவலியால் அவரின் உயிர் பிரிந்தது.

இந்த நிலையில் மயில்சாமி சிவன் பக்தர் என்பதால் அவரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறும் நிலையில் அவருடைய இல்லத்தில் சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்தனர். சண்டி மேளம் அடித்து சிவனடியார்கள் சிவபுராணத்தை பாடி நடிகர் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தினர்.

First published:

Tags: Mayilsamy, Tamil cinema news