கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 800 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியது.
கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.720.31 கோடி வசூல் செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டாவது வாரத்தில், கடந்த வெள்ளிக்கிழமைக்குள் ரூ.776.58 கோடியை ஈட்டியது, ஆகையால் இந்த வார இறுதியில் ரூ.800 கோடியைத் தாண்டியிருக்கிறது. வட அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸ் கலெச்ஷனையும் சேர்த்தால் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 900 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் என்கிறார்கள்.
கை, கால் வரல... பேசவும் முடியல... சின்னத்திரை பிரபலம் ப்ரீத்தா ராகவ் கண்ணீர்
முன்னதாக, முன்னணி நடிகர் யாஷ், "ஒட்டுமொத்த KGF டீம் சார்பாக எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் நிச்சயம் படத்தை ரசிப்பீர்கள், தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் இதயம் தான் எனது கூடாரம்” என்று உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டிருந்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.