உலகின் உயரமான ஸ்க்ரீனாக இருக்கும் துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
உலகின் மிக உயரமான ஸ்க்ரீனான புர்ஜ் கலிபாவில் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 8.10-க்கு திரையிடப்படும் என நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது.
இந்த கட்டிடம் 828 மீட்டர் உயரம் அதாவது 2,717 அடி உயரம் கொண்டதாகும். இதுவரையில் எந்த தமிழ் படத்தின் ட்ரெய்லரும் புர்ஜ் கலிபாவில் திரையிடப்படவில்லை. இந்த சாதனையை விக்ரம் படம் இன்று தொடங்கி வைத்துள்ளது.
இதையும் படிங்க - Vikram Review : விக்ரம் படம் எப்படி இருக்கு? படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ சொன்ன உதயநிதி…
இந்திய நேரப்படி இரவு 8.10-க்கு விக்ரம் படத்தின் ட்ரெய்லர் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் திரையிடப்பட்டது.
இதனை கமல் உள்ளிட்ட படக்குழுவினரும், ஏராளமான ரசிகர்களும் நேரில் கண்டு ரசித்தனர்.
இதையொட்டி, பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதையும் படிங்க - 117 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்..
விக்ரம் படத்தின் ட்ரெய்லரை பார்க்க...
க்ளைமேக்ஸ் காட்சியின்போது சூர்யா படத்தில் இடம்பெறுவார் என்றும், இந்த காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமையும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.