முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா, விஜய் சேதுபதி படம்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா, விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவருக்கிடையில் நடக்கும் முக்கோண காதல் கதையிது என கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவருக்கிடையில் நடக்கும் முக்கோண காதல் கதையிது என கூறப்படுகிறது.

நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  • Last Updated :

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடித்திருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. 

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கிவரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

தற்குமுன் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாராவும், விஜய் சேதுபதியும் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தின் போதுதான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் ஏற்பட்டது. இப்போதுவரை அந்த காதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது

காத்துவாக்குல காதல் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. திரையரங்கில் வெளியாக வேண்டிய படம் அது. ஆனால், படத்தை ஓடிடியில் வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியாக உள்ளது. தீபாவளிக்கு படத்தை வெளியிட வாய்ப்புள்ளது.

இதற்குமுன் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நெற்றிக்கண் திரைப்படமும் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் சன் தொலைக்காட்சியில் முதன்முறை ஒளிபரப்பப்பட்டு உடனடியாக ஓடிடியில் வெளியானது. அடுத்து ஒரேவாரத்தில் அனபெல் சேதுபதி நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்போது இவர்கள் இணைந்து நடிக்கும் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது

நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓடிடி வெளியீட்டை தடுக்க முடியாது என்பதால் மறைமுகமாக பல கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

Also read... ஆயுதபூஜை ஸ்பெஷலாக வரும் ஜோதிகா, சசிகுமாரின் உடன்பிறப்பே!

ஓடிடியில் வெளியான படத்தை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்பது அதில் ஒன்று. இந்த கட்டுப்பாடு காரணமாக சூரரைப்போற்று திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட முடியாமல் போனது. அதேபோல், ஒரு படம் திரையரங்கில் வெளியானால், நான்கு வாரங்கள் கழித்தே அதனை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பது இன்னொரு கட்டுப்பாடு. இதனை மீறியதால் இந்தி தலைவி பதிப்பை பிவிஆர் உள்ளிட்ட சில மல்டிபிளக்ஸ்கள் திரையிடவில்லை.

நயன்தாரா, விஜய் சேதுபதி படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாவதால் இவர்கள் இருவர் மீதும் திரையரங்கு உரிமையாளர்கள் மறைமுக நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு

First published:

Tags: Actress Nayantara, Actress Samantha, Director vignesh shivan