ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடித்துள்ள கோல்மால் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
பொன் குமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். அந்தப் படத்திற்கு கோல்மால் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை பின்னணியில் உருவாகும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோல்மால் திரைப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதற்கான முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளனர்.
சிவா மற்றும் ஜீவா ஆகியோர் ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு-2 திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
அந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது. அதில் ஜீவா, சிவா ஆகியோருடன் ஜெய்யும் சேர்ந்து நடித்திருந்தார். அவர்கள் மூவரும் சம்பந்தப்பட்டு காட்சிகள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
இதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக இருவரும் கோல்மால் திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் யோகி பாபு, தன்யா ஹோப் (Tanya Hope) நடித்துள்ளனர். இவர்களை தவிர பிரபலமான நடிகை மாளவிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.