முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஐந்து மொழிகளில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன்- ரசிகர்கள் உற்சாகம்

ஐந்து மொழிகளில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன்- ரசிகர்கள் உற்சாகம்

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன் படம் ஐந்து மொழிகளில் பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெய் பீம் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யாவின் கடைசி இரு படங்கள் சூரரைப் போற்று, ஜெய் பீம் இரண்டும் ஓடிடியில் நேரடியாக வெளியானதால் விரக்தியில் இருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு திரையரங்கில் விருந்து வைக்கப் போகும் திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் இருக்கும். பாண்டிராஜ் கிராமத்துப் பின்னணியில் சென்டிமெண்டும் அதற்கு குறையாத ஆக்ஷனும் கலந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். எதற்கும் துணிந்தவனில் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக புத்தாண்டையொட்டி படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். புதுவருடத்தில் படத்தின் புரமோஷனை தொடங்கும் விதமாக ஜனவரி 1-ம் தேதி டீஸர் வெளியிடப்படலாம் என்கின்றன உள்வட்ட தகவல்கள்.

முன்னதாக ஏற்கெனவே பிப்ரவரி 4-ம் தேதி எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிப்ரவரி 4-ம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சூர்யா ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

First published:

Tags: Actor Suriya