இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் கடந்த 2,3 நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவரை அணுகுமாறு செல்வராகவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
இன்று (23-01-2022)எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2,3 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவரை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன். கொரோன பரவல் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள். எல்லோரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செல்வராகவன் மனைவி கீதாஞ்சலிக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையில் பாதிக்கப்படாத திரைத்துறையினர் பலர், மூன்றாவது அலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மாஸ் அப்டேட்!
குறிப்பிடத்தகும் வகையில் திரிஷா, இசையமைப்பாளர் தமன், சத்யராஜ் உள்ளிட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா கடந்த சில வாரத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க :
விஜய் டிவி குக் வித் கோமாளியில் சூர்யா பட ஹீரோயினா? சொல்லவே இல்லை!
ட்விட்டரில் தொடர்ந்து பாசிட்டிவான கருத்துக்களை இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டு வருகிறார். அவருக்கே கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க :
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் படம்!
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக் காயிதம் என்ற படம், நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளதால் சாணிக் காயிதம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.