முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் சேதுபதியால் தான் மாமனிதன் ஆசியாவில் சிறந்த திரைப்படமாக தேர்வானது - இயக்குனர் சீனுராமசாமி

விஜய் சேதுபதியால் தான் மாமனிதன் ஆசியாவில் சிறந்த திரைப்படமாக தேர்வானது - இயக்குனர் சீனுராமசாமி

இயக்குனர் சீனுராமசாமி

இயக்குனர் சீனுராமசாமி

விக்ரம் திரைப்படம் வெளியான போது அதிக விளம்பரம் இல்லாமல் மாமனிதன் திரைப்படம் வெளியானது. 40% பார்வையாளர்கள் மட்டுமே பார்த்த மாமனிதன் ஆஹா ஓடிடி தளத்தில் தற்போது மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் சேதுபதி மாமனிதன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால் மட்டுமே அந்தப் படம் ஆசியாவில் சிறந்த திரைப்படமாக தேர்வானது என இயக்குனர் சீனுராமசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பாரதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி கலந்து கொண்டார். விழாவில் இயக்குனர் சீனு ராமசாமிக்கு "மாமனிதன்" விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீனு ராமசாமி, இளம் இயக்குனர்களை எனது சமகால படைப்பாளிகளாக தான் பார்க்கிறேன். அவர்கள் மிகவும் பரபரப்பான ஆக்சன் படங்கள் மற்றும் நுண்ணுணர்வான படங்களையும் இந்த வயதில் துணிந்து எடுப்பதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு முன்பாக திரையுலகுக்கு வந்தாலும் சமகாலத்தில் பயணிப்பவர்கள் என்று முறையில் அவர்களுடன் சேர்ந்து நல்ல பாதையில் பயணிக்க விரும்புவதாக கூறினார்.

விக்ரம் திரைப்படம் வெளியான போது அதிக விளம்பரம் இல்லாமல் மாமனிதன் திரைப்படம் வெளியானது. 40% பார்வையாளர்கள் மட்டுமே பார்த்த மாமனிதன் ஆஹா ஓடிடி தளத்தில் தற்போது மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. உலக நாடுகளில் மாமனிதன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன் முதல் தொடக்கம் தான் டோக்கியோ நகரில் சிறந்த ஆசியா படம் என்பது மாமனிதன் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி மாமனிதன் திரைக்கதையை கேட்டு விட்டு நடிக்கிறேன் என்று கூறியதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. அடுத்து இடிமுழக்கம் என்னும் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகளை ஈடுபட்டு வருகிறோம். அதன்பின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.

Also read... முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்து 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் - திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

நீட் தேர்வை கண்டு மாணவ மாணவிகள் பயப்படக்கூடாது. டாக்டர் இல்லை என்றால் மருத்துவத்துறையில் வேறு படிப்புகள் உள்ளன அதனை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்கலாம். தற்கொலை எண்ணத்தை அறவே தவிர்க்க வேண்டும். தன்னை வளர்த்த பெற்றோர்களை நிரந்தர சோகத்தில் மாணவர்கள் தள்ளக்கூடாது. கனவு ஈடேறாத போது மாணவர்கள் அது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதற்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது. தற்கொலை முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது என்று கூறினார். எனது ஒவ்வொரு படத்திலும் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்ச்சி இருந்து வருகிறது என்றும் சீனு ராமசாமி தெரிவித்தார்.

-செய்தியாளர்: திருமலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Seenu ramasamy