முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாமன்னன் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜின் அடுத்தப் படம்

மாமன்னன் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜின் அடுத்தப் படம்

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாமன்னன் திரைப்படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியானது. 

இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் தீவிரமான அரசியல் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மாமன்னன் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையே ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு, நடிகர் கலையரசனை வைத்து, பிரபல OTT தளம் தயாரிக்கும் வெப் தொடரை இயக்கவிருக்கிறாராம் மாரி செல்வராஜ். இதில் நடிகர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த டிஜிட்டல் தொடருக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மகளுக்கு மணிரத்னம் கொடுத்த வாய்ப்பு!

இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷை வைத்து அவர் இயக்கிய ‘கர்ணன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், கோலிவுட்டின் முக்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய திரைப்பட இயக்குநராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். கலையரசனை பொறுத்தவரை கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

First published:

Tags: Mari selvaraj, Tamil Cinema