சூர்யாவுடன் அருவா திரைப்படம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு இயக்குநர் ஹரி கூறியுள்ளார்.
இயக்குனர் ஹரி - அருண் விஜய் கூட்டணியில் யானை திரைப்படம் வரும் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான புரமோஷன் வேலைகளில் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் மும்முரமாக உள்ளனர்.
அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து உரையாடினார். இதைத்தொடர்ந்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தனர்.
அதில் படம் குறித்தும், படப்பிடிப்பில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துகொண்டனர். அப்போது ஹரி - சூர்யா கூட்டணியில் உருவாகவிருந்த அருவா திரைப்படம் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு நேரடியாக பதில் அளித்த இயக்குநர் ஹரி, அருவா திரைப்படம் வியாபாரம் உள்ளிட்ட புரோபஷனல் காரணங்களால் நின்றது. அந்தப் படம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். சூர்யா என்னுடைய சகோதரர் என இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.
யானை திரைப்படத்திற்கு முன்பாக ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் அருவா என்ற திரைப்படம் உருவாகவிருந்து. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. அதற்கு பின்னரே அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.