தனது மகள் ஐஸ்வர்யா அவரது கணவர் தனுஷுடன் இணைய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் விரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள்
பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில்
ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் இணைவதையே ரஜினி விரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், “ரஜினி சார் தனது மகளின் திருமண பிரிவை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார். பிரிவு தற்காலிகமானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திருமண பிரச்னைகளை பேசி சீர்செய்யுமாறு தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யாவை வற்புறுத்தி வருகிறார்” என்றார். இருப்பினும், ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் பிரிவு குறித்து ரஜினிகாந்த் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
கையில் குழந்தை பக்கத்தில் அம்மா... வைரலாகும் விஜய்யின் சிறுவயது புகைப்படம்!
கடந்த வாரம் இது குறித்து பேசிய தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருக்குமிடையே வந்திருப்பது சாதாரண கணவன் மனைவி சண்டை தான் என்றும், அவர்களை இணைக்க குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.