தனுஷ் எனக்கு மருமகன் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக வெளியான செய்தி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை அறிவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
இதையடுத்து அவர்களின் பிரிவு தற்காலிகமானது தான் என்றும், விரைவில் ஒன்றிணைவார்கள் என்றும் கூறப்பட்டது. அப்பாவின் வேண்டுகோளை ஏற்று தனுஷுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு தனுஷ் செவி சாய்க்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலிமை படத்தைப் பற்றி அஜித்தின் அண்ணன் அனில் குமார் என்ன சொன்னார் தெரியுமா?
இந்நிலையில் மகளின் வாழ்க்கை குறித்து தனது நண்பர்களிடம் ரஜினிகாந்த் புலம்பியதாகவும், தனுஷ் தனது மருமகன் இல்லை என்றும், அவர் தனது மூத்த மகன் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.