மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ், மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது 1 மில்லியன் லைக்குகளைக் கடந்துள்ளது.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?
இதையடுத்து தனுஷ் தனது படங்களிலும்,
ஐஸ்வர்யா அவர் இயக்கும் மியூசிக் ஆல்ப படப்பிடிப்பிலும் பிஸியானார்கள். சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்ட ஐஸ்வர்யா தற்போது, காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!
இந்நிலையில் தனுஷ் தனது 4 செல்ல நாய்களுடன் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கும் படத்தை
இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “ஒரு நீண்ட சந்திப்பு!! மீண்டும் என் பையன்களுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது 1 மில்லியன் லைக்குகளைக் கடந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.