காதலர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஐஸ்வர்யா இசை ஆல்பம் ஒன்றை இயக்கும் வேலைகளில் பிஸியானார். இதற்காக ஐதராபாத்தில் தங்கியிருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் சுய தனிமைப்படுத்தலில் இருந்து அதிலிருந்து மீண்டார்.
Arabic Kuthu: 45 நிமிடத்தில் 1 மில்லியன் வியூஸ்... 5 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... பட்டையைக் கிளப்பும் விஜய்யின் அரபிக் குத்து!
தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் ஒருவரையொருவர் இன்னும் புரிந்துக்கொள்ள தற்காலிகமாக பிரிந்திருப்பதாகவும், விரைவில் வேறுபாடுகளை களைந்து அவர்கள் ஒன்றிணைவார்கள் என்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
Arabic Kuthu: 10 மில்லியன் நிகழ்நேர பார்வைகளைப் பெற்ற விஜய்யின் அரபிக் குத்து!
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அப்படி என்ன ஸ்பெஷல் புகைப்படம் என்கிறீர்களா?
சிவப்பு நிற இதய வடிவிலான கேக்கில், A promise made is a promise kept என எழுதப்பட்டிருக்கும் படம் தான் அது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.