நடிகர் தனுஷுடனான பிரிவை அறிவித்த ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அதன் படம் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இதையடுத்து
தனுஷ் தனது வாத்தி படப்பிடிப்பிற்காகவும், ஐஸ்வர்யா தனது
பட வேலைகளுக்காகவும் ஐதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் ஐஸ்வர்யா ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இசை ஆல்பத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆல்பத்திற்கான பேச்சு வார்த்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்துள்ளது. அதில் கலந்துக் கொண்ட ஐஸ்வர்யாவின் படம் இணையத்தில் வெளியாகி,
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.