முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராதாரவி தலைமையில் இயங்கும் டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல்... மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை..!

ராதாரவி தலைமையில் இயங்கும் டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல்... மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை..!

டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல்

டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல்

டப்பிங் கலைஞர்களுக்கு என தனி அலுவலகம் வடபழனி விஜயராகவபுரத்தில் இயங்கி வருகிறது.  சொந்த இடத்தில் கட்டடம் கட்டி அந்த அலுவலகம் இயங்குகிறது. அதற்கு நடிகர் ராதாரவி தலைவராக உள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டப்பிங் கலைஞர்களுக்கு என தனி அலுவலகம் வடபழனி விஜயராகவபுரத்தில் இயங்கி வருகிறது.  சொந்த இடத்தில் கட்டடம் கட்டி அந்த அலுவலகம் இயங்குகிறது. அதற்கு நடிகர் ராதாரவி தலைவராக உள்ளார். டப்பிங் யூனியன் கட்டிடம் இயங்கும் இடம் 2011ல் வாங்கப்பட்டுள்ளது.  அப்போது நிலமாக வாங்கி கட்டடம் கட்டியதாக அரசுக்கு கூறியுள்ளனர்.

ஆனால் கட்டடத்துடன் கூடிய இடத்தை வாங்கி அதிலிருந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, அதன் பிறகு புதிய கட்டடத்தை கட்டியுள்ளனர். ஆனால் அந்த புதிய கட்டிடம் கட்டியதற்கு அரசு தரப்பில் இருந்து முறையான அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதுகுறித்து ஆய்வு செய்து உத்தரவிடும்படி வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  ஆய்வு செய்த அதிகாரிகள் ராதாரவியிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.  அத்துடன் விதிகளுக்கு உட்பட்டுதான் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.

அதன் இறுதியில் டப்பிங் யூனியன் கட்டிடம் அனுமதி இன்றி கட்டப்பட்டு இருப்பதாகவும் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து தலைவர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ராதாரவி தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  இதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Radharavi, Tamil Cinema