பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்த இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகள் சார்பாக களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.
இதில் திரௌபதி முர்மு குறித்து பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டபோது, அதனை வரவேற்றும், எதிர்த்தும் விமர்சனங்கள் வெளிவந்தன.
பாவம் கணேசன் நவீன் மனைவி கிருஷ்ணகுமாரி வளைகாப்பு - வைரலாகும் படங்கள்
அதில் இயக்குனர் ராம் கோபால் வர்மா, திரௌபதி குடியரசு தலைவர் என்றால் பாண்டவர்கள் யார் என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்தார். இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புராணத்தில் பாஞ்சாலி என அழைக்கப்பட்ட திரௌபதிக்கு தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பஞ்ச பாண்டவ துணைவர்கள் உண்டு.
இதனால் ராம்கோபால் வர்மாவின் ட்வீட் சீரியஸான விஷயமாக மாறிப்போனது. விபரீதத்தை உணர்ந்த அவர், தான் உள்நோக்கத்தில் எதையும் பதிவிடவில்லை என்றும், புராண கேரக்டர்களில் தனக்கு திரௌபதியை பிடிக்கும் என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மனோஜ் சின்ஹா என்பவர் ராம் கோபால் வர்மா மீது புகார் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்படி போடு! பிக் பாஸ் பிரியங்கா சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வைரல் தகவல்
அவர் போலீஸ் விசாணைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்பது குறித்த விபரங்கள் விரைவில் தெரியவரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.