சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் சிபி இயக்கத்தில் அனிருத் இசையில் டான் படம் உருவாகியுள்ளது.
படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயேன் நியூஸ் 18க்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
டான் படத்தில் எமோஷன் காட்சிகள் உள்ளன. அதற்காகத்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். எமோஷன் காட்சிகள்தான் இயக்குனர் சிபியின் பலம் என்று நினைக்கிறேன். அதே நேரம் கல்லூரி சம்பவங்களை பெரிதாக காட்ட வேண்டும் என்று முடிவு செய்து பணியாற்றினோம்.
நான் பாடல் எழுதுவதற்கு நண்பர்கள்தான் காரணம். அவர்கள் கேட்கும்போது, எனக்கு அது வேலையாகத் தோன்றாது. நண்பர்களுக்காக பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம்தான் எனது மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
இதையும் படிங்க - அஜித்தின் 'AK 61' படத்தில் இணைந்த பிரபல நடிகர்...
எனது எல்லா நேரங்களிலும் எனக்கு ஆதரவாக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் அவர்களை எனக்கு பிடித்திருக்கிறது. நான் உங்களை கொண்டாடுகிறேன். நீங்கள் என்னை கொண்டாடுங்கள். இந்த உறவு எப்போதுமே தொடரட்டும்.
இதையும் படிங்க - ரசிகர்களின் வரவேற்பை பெறும் கே.ஜி.எஃப் 2 மேக்கிங் வீடியோ!!
அனிருத்தின் பின்னணி இசையை எல்லோருமே ரசிக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ற இசையை அவர் வழங்குகிறார்.
நேர்காணலை காண
அனிருத் எனக்கு நெருங்கிய நண்பர். சினிமா தொடர்பான வேலைகளுக்கு அப்பால் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள நம்பிக்கைதான் தொடர்ந்து பாடல்கள் ஹிட்டாவதற்கு காரணம். அரபிக்குத்து பாடலை சிவாதான் எழுத வேண்டும் என்று அனிருத் தான் சொன்னார்.
இவ்வாறு அவர் கூறினார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.