கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், தங்களின் திருமணத்தை தள்ளி வைத்துள்ளது ரன்பீர் - அலியா ஜோடி.
காதல் கடலில் நங்கூரமில்லாத கப்பலாக அலைந்தவர் ரன்பீர் கபூர். அவ்வப்போது ஏதாவது துறைமுகத்தில் கப்பல் இளைப்பாறும். அப்படி தீபிகா படுகோனுடன் கொஞ்ச நாள் காதலில் இருந்தார். பிறகு இந்த ஜோடி பிரிந்தது.
கரண் ஜோஹர் நடத்தும் டாக் ஷோவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனிடம், ரன்பீருக்கு என்ன பரிசளிக்க விரும்புகிறார்கள் என கேட்கப்பட்டது. அந்த நேரம் அவரை தீபிகா பிரிந்திருந்தார். ஒரு பண்டல் காண்டம் என்றார் தீபிகா. இந்த பதில்
சர்ச்சையானது. ரன்பீரைவிட அவரது தந்தை ரிஷி கபூர் அதிகம் கோபப்பட்டார். இப்போது தீபிகாவுக்கு திருமணமாகிவிட்டது. ரிஷி கபூர் மறைந்துவிட்டார்.
ரன்பீர் என்ற கப்பல் இப்போது அலியா பட்டிடம் கரை ஒதுங்கியிருக்கிறது. இருவரும் பல வருடங்களாக காதலிக்கின்றனர். 2020-ல் திருமணம் செய்வதாக இருந்த போது
ரிஷி கபூர் இறந்தார்.
திருமணம் தள்ளிப் போனது. இந்த வருடம் திருமணத்தை நடத்த இருந்த போது இருவருக்குமே கோவிட் பாஸிடிவ். அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், திருமணம் செய்கிற சூழல் இதுவல்ல என்று மறுபடியும் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.