முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Akshay Kumar: கொரோனா காரணமாக சம்பளத்தில் 30 சதவீதம் குறைத்துக் கொண்டாரா அக்‌ஷய் குமார்?

Akshay Kumar: கொரோனா காரணமாக சம்பளத்தில் 30 சதவீதம் குறைத்துக் கொண்டாரா அக்‌ஷய் குமார்?

அக்‌ஷய்குமார்

அக்‌ஷய்குமார்

இந்த வருடம் அவரது நடிப்பில் சூரியவன்ஷி, அத்ரங்கி ரே, பிருத்விராஜ் ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெல் பாட்டம் திரைப்படம் திரையரங்குக்கு பதில் ஓடிடியில் வெளியாக உள்ளதால், தனது சம்பளத்தில் 30 கோடிகளை விட்டுத் தந்துள்ளதாக வெளியான செய்தியை அக்‌ஷய் குமார் மறுத்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களாக இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிரு இடங்களில் இருக்கிறார் அக்‌ஷய் குமார். அமீர் கானும், ஷாருக்கானும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கின்றனர். சல்மான் கான் வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்கள் நடிக்கிறார். ஆனால், அக்ஷய் குமார் குறைந்தது நான்கு படங்களில் நடிக்கிறார். கொரோனா பாதிப்புக்குள்ளாகி படப்பிடிப்பு தடைப்பட்ட போதும் இந்த வருடம் நான்கு படங்கள் அவரது நடிப்பில் வெளியாகின்றன.

இதில் ரஞ்சித் திவாரி இயக்கிய ஸ்பை த்ரில்லர் படமான பெல் பாட்டம், எப்போதோ வெளியாகியிருக்க வேண்டும். கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போன படம், தற்போது ஓடிடி வெளியீடாக வரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு 117 கோடிகள் அக்ஷய்க்கு சம்பளம் பேசப்பட்டிருந்தது. காலதாமதம் மற்றும் ஓடிடி வெளியீடு காரணமாக சம்பளத்தில் 30 கோடிகள் குறைத்துக் கொள்ள படத்தின் தயாரிப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்து 30 கோடிகளை விட்டுத் தந்துள்ளார் அக்ஷய் என பிரபல இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. அதனை அக்ஷய் குமார், ஃபேக் நியூஸ் என மறுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வருடம் அவரது நடிப்பில் சூரியவன்ஷி, அத்ரங்கி ரே, பிருத்விராஜ் ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன. அடுத்த வருடம் 2022 முதல் தனது சம்பளத்தை 117 கோடியிலிருந்து 135 கோடிகளாக அக்ஷய் உயர்த்தியுள்ளார். அதேநேரம், தனது நெருங்கிய நண்பர் தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலா தயாரிக்கும் பச்சான் பான்டே ஆக்ஷன் காமெடி படத்துக்கு மட்டும் 99 கோடிகள் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

இந்த விவரங்களை அந்த இணையதளம் துல்லியமாக வெளியிட்டுள்ளது. தனது சம்பளம் குறித்த செய்தியை வெளியிட்டதன் காரணமாகவே, அக்ஷய் குமார் 30 கோடிகள் விட்டுத் தந்ததை மறுத்துள்ளார் என பாலிவுட்டில் கூறுகிறார்கள். மேலும், இதைப் பார்த்து மற்றவர்களும் சம்பளத்தை விட்டுத் தரச் சொன்னால் என்னாவது என்ற கவலையும் அக்ஷய்க்கு இருக்கும் தானே என்கிறார்கள்.

எப்படியோ, ஒரு படத்துக்கு 100 கோடிகளுக்கு மேல் அக்ஷய் குமார் சம்பளம் வாங்குவது மட்டும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Akshay Kumar