முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Valimai: மனதை உருக வைக்கும் அம்மா பாடல் - வலிமை செகண்ட் சிங்கிள் வெளியீடு!

Valimai: மனதை உருக வைக்கும் அம்மா பாடல் - வலிமை செகண்ட் சிங்கிள் வெளியீடு!

வலிமை

வலிமை

‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ எனத் தொடங்கும் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வலிமை படத்தின் செகண்ட் சிங்கிளான ‘மதர் சாங்’ நேற்று மாலை வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முன்னதாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதோடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. செப்டம்பர் இறுதியில் படத்தின் க்ளிம்ப்ஸும் வெளியானது.

' isDesktop="true" id="631897" youtubeid="auBq_Z6zWSE" category="cinema">

மேலும் பார்க்க - கிராமத்து பெண்ணாக ராஷ்மிகா - வைரலாகும் புகைப்படங்கள்

இதையடுத்து நேற்று மாலை வலிமை படத்தின் செகண்ட் சிங்கிளான ‘மதர் சாங்’ வெளியானது. ‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ எனத் தொடங்கும் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Ajith, Valimai