திருச்சி மாவட்ட ரைபிள் கிளப் சார்பில், மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் கே.கே.நகரில் நடைபெற்று வருகின்றன. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 1,200 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், துப்பாக்கி சுடும் போட்டிகளில் பெரும் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார், நேற்று மதியம் யாரும் எதிர்பாராத வகையில் ரைபிள் கிளப் வந்தார்.
அங்கு அவர், துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றார். முதலில், 50 மீட்டர், அடுத்து, 20மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் தலா இரண்டு பிரிவுகளில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதாக இருந்தது.
அவசரமாக திரும்பிய அஜித்!
ஆனால் நேற்று அஜித்தின் வருகையை தெரிந்து கொண்ட அவரது ரசிகர்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ரைபிள் கிளப் முன்பு திரண்டு விட்டார்கள். சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கார், வேன்களில் கிளம்பியபடி இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரைபிள் கிளப் முன்பு அவர்கள் தொடர்ச்சியாக கூச்சல் எழுப்பியபடியே இருந்ததால் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ஒருவித அசெளகரியம் ஏற்பட்டது. போட்டியில் பங்கேற்ற அஜித்தும் இதை உணர்ந்திருக்கிறார்.
Must Read : உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி.. பணம், குடியிருந்த வீட்டை இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை
அதையடுத்து, தன்னால் மற்ற போட்டியாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக இன்றைய போட்டியில் அஜித் பங்கேற்கவில்லை. நேற்றிரவு திருச்சியில் தங்கும் முடிவையும் திடீரென மாற்றி, இரவோடு இரவாக சென்னை திரும்பிச் சென்று விட்டார். இதனால், இன்றும் ‘தல’ அஜித் தரிசனம் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.