முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திருப்பதி கோயிலுக்குள் முத்தம் - நடிகை ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பு...!

திருப்பதி கோயிலுக்குள் முத்தம் - நடிகை ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பு...!

ஸ்ரேயா

ஸ்ரேயா

ஸ்ரேயா கடைசியாக தமிழில் கார்த்தின் நரேன் இயக்கிய நரகாசூரன் படத்தில் நடித்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பதி கோயில் வளாகத்துக்குள் முத்தமிட்டுக் கொண்ட நடிகை ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரேயாவுக்கு அதிக படங்கள் இல்லாதிருந்த காலகட்டத்தில் (2018) ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆன்ட்ரி கோஸ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கும் படங்களைவிட, கணவருடன் இருக்கும் புகைப்படங்களே அதிகம் வெளியாயின. ஸ்ரேயாவே அதனை வெளியிட்டு வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேற்று முன்தினம் ஸ்ரேயா கணவருடன் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. கோயில் வளாகத்தினுள் ஆன்ட்ரி கோஸ்சீவா ஸ்ரோவுக்கு முத்தம் தரும் புகைப்படமும் அதில் இடம்பெற்றிருந்தது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோயிலுக்குள் முத்தமிட்டு அதன் புனிதத்தை ஸ்ரேயாவும், அவரது கணவரும் கெடுத்துவிட்டதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். அன்பு மிகுதியில் நெற்றியில் கொடுக்கப்படும் முத்தம் தவறில்லை என்று ஸ்ரோயாவுக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்

Also read... அட்லி, ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

ஸ்ரேயா கடைசியாக தமிழில் கார்த்தின் நரேன் இயக்கிய நரகாசூரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. தெலுங்கில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்துள்ளார். இவை தவிர தற்போது அவர் கைவசம் எந்தப் படங்களும் இல்லை.

First published:

Tags: Actress Shriya