தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஷாப்பிங் மால் ஒன்றை இன்று திறந்து வைத்தார். அவரைக் காண்பதற்காக இளைஞர் கூட்டம் ஆயிரக்கணக்கில் திரண்டதால், கடப்பா நகரமே சில நிமிடம் ஸ்தம்பித்துப் போனது.
சமந்த வருகை பற்றி ஜவுளிக்கடை நிர்வாகம் பெருமளவில் விளம்பரம் செய்திருந்தது. இதனால் சமந்தாவை பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர்.
இந்த நிலையில் கடையை திறந்து வைப்பதற்காக வந்த சமந்தாவை பார்த்த அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ஜவுளி கடையை திறந்து வைத்த சமந்தா ரசிகர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
சமந்தாவுடன், ஆந்திராவின் துணை முதல்வர் அம்ஜத் பாஷா, கடப்பா மேயர் சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து ஷாப்பிங் மாலை திறந்து வைத்தனர்.
Also Read : 5 மொழிகளில் தயாராகும் சமந்தாவின் யசோதா!
நடிகை சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ''காத்து வாக்குல இரண்டு காதல்'' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இடம்பெற்றுள்ளனர். இம்மாத இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : மணமுறிவுக்குப் பிறகு இறந்து விடுவேன் என நினைத்தேன் - சமந்தா உருக்கம்
தனது திருமண முறிவுக்குப் பிறகு சமந்தா தொடர்ந்து படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். சமந்தா அடுத்து யசோதா என்ற படத்தில் நடிக்கிறார். ஹரி மற்றும் ஹரீஷ் இணைந்து இயக்கும் இந்தப் படத்தை ஸ்ரீதேவி பிலிம்ஸ் சிவலங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இசை மணிசர்மா. ஒளிப்பதிவு எம்.சுகுமார். நாயகி மையத் திரைப்படமான இது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக தயாராகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Samantha