முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும்’ – நடிகை சாய் பல்லவி பேச்சு

‘பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும்’ – நடிகை சாய் பல்லவி பேச்சு

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி

Actress Sai Pallavi : நான் நம்புவது என்னவென்றால், நீங்கள் என்னை விட வலிமையானவராக இருந்தால், நீங்கள் என்னை ஒடுக்குகிறீர்கள் என்றால், நீங்கள் தவறு செய்கிறீர்கள்.

  • Last Updated :

சாய் பல்லவி, ராணா டகுபதி நடிப்பில் விராட பர்வம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது.

இதையொட்டிபடத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் சாய் பல்லவியும், ராணாவும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் நக்சல் தலைவர் என்ற கேரக்டரில் ராணா நடித்துள்ளார்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர்தெரிவித்துள்ளனர். புரொமோஷனுக்காக நடைபெற்ற நேர்காணலின்போது நடிகை சாய்பல்லவி கூறியதாவது-

எனது குடும்பத்தினர் எந்த கொள்கையையும் சாராதவர்கள்.  நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்றுதான் எனது குடும்பத்தினரால் நான் வளர்க்கப்பட்டுள்ளேன்.

லாரன்ஸ், வடிவேலு நடிப்பில் சந்திரமுகி – 2… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்க வேண்டும். இடது சாரிகள், வலது சாரிகள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை நம்மால் சொல்ல முடியாது.

காஷ்மீர் பண்டிட்டுகள் அனுபவித்த கொடுமைகளை தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் கூறியிருந்தார்கள். மத அடிப்படையில் இந்த சம்பவங்களை நீங்கள் அணுகினால், சமீபத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற முஸ்லிம் டிரைவர் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல வேண்டும் என்று கூறி தாக்கினார்கள்.

’மீண்டும் உங்களை சந்திப்பேன்; என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமெரிக்கா புறப்படும் முன் டி.ஆர். கண்ணீர் மல்க பேட்டி

காஷ்மீர் பண்டிட் பிரச்னை, முஸ்லிம் டிரைவர் மீதான தாக்குதல் இவ்விரு சம்பவங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்க முடியும்? நாம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் பிறரை காயப்படுத்த மாட்டோம்.

நான் மிகவும் நடுநிலையானவள். எனவே நான் நம்புவது என்னவென்றால், நீங்கள் என்னை விட வலிமையானவராக இருந்தால், நீங்கள் என்னை ஒடுக்குகிறீர்கள் என்றால், நீங்கள் தவறு செய்கிறீர்கள்.

ஒரு சிறிய கூட்டத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒடுக்குவது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Actress sai pallavi