நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக, அவரது சகோதரி மற்றும் டெல்லி மருத்துவமனை மருத்துவர் மீது நடிகை ரியா சக்ரபோர்த்தி புகார் அளித்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிக்கிய நடிகை ரியாவிடம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இரண்டாவது நாளாக எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சுஷாந்தின் சகோதரி பிரியங்கா மற்றும் டெல்லி ஆர்.எம்.எல். மருத்துவமனை டாக்டர் தருண் குமார் ஆகியோர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி நடிகை ரியா புகாரளித்துள்ளார்.
மருத்துவர் தருண் குமார் கொடுத்த மருந்து குறிப்பை, பிரியங்கா சுஷாந்திற்கு அனுப்பியதாகவும், அதனை உட்கொண்ட ஐந்து நாட்களில் சுஷாந்த் இறந்ததாகவும் ரியா சந்தேகம் தெரிவித்துள்ளார். எனவே இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.