நடிகர் சூர்யாவுடன் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக நடிகை கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.
தெலுங்கில் வெளியான Uppenna திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. 19 வயதாகும் இவர், தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கும் தி வாரியர் திரைப்படத்தில் லிங்குசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார்.
வரும் 14ஆம் தேதி வெளியாகவிருக்கும் வாரியர் திரைப்படம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய கீர்த்தி ஷெட்டி, தன்னுடைய முதல் திரைப்படத்தின் டிரைலரை பார்த்து லிங்குசாமி வாய்ப்பு கொடுத்தார். அத்துடன் மீரா ஜாஸ்மின் போல இருப்பதாக கூறினார். அதன் காரணமாக எனக்கு வாரியர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் ஒருவரை ஒருவர் ஆதரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வாரியர் திரைப்படத்தின் வெளியிட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர் போன்ற பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதை பார்ப்பதற்கு சந்தோஷமாக உள்ளது. அவர்கள் தன்னை பாராட்டியது பெரும் சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதே போல் வாரியர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் லிங்குசாமி கீர்த்தி ஷெட்டியை திட்டியதாகவும், அதற்கு அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் செய்திகள் வெளியாகின. அது குறித்த கேள்விக்கு, ஆரம்பத்தில் தனக்கு தமிழை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. அதன் காரணமாக அவர் கூறிய காட்சியை உள்வாங்கிக் கொள்வதில் சிரமப்பட்டேன். அப்போது என்ன செய்வது தெரியாமல் இருந்தேன்.
ஆனால் அதற்குப் பிறகுதான் தெரிந்தது, எதற்காக இத்தனை முறை கேட்கிறார்கள் என்று, தற்போது படத்தில் அந்த காட்சிகளை பார்க்கும் பொழுது, ஏன் அதிக முறை கேட்டுக் கொண்டே இருந்தார்கள் என்று புரிகிறது என தெரிவித்தார்.
லிங்குசாமியின் திரைப்படங்களில் ஒவ்வொரு காட்சியும் க்யூட்டாக இருக்கும். அதே போல இந்த திரைப்படத்திலும் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகள் ரசிக்க வைக்கும். மேலும் ஆக்சன் - காமெடி - காதல் என கடமையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நம்புவதாக கூறினார்.
தன்னுடைய முதல் தமிழ் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே இயக்குனர்கள் பாலா, வெங்கட் பிரபு போன்றவர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது தனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாகவும் கீர்த்தி ஷெட்டி கூறினார்.
குறிப்பாக சூர்யாவின் 41-வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த வருகிறார். இது குறித்து பேசுகையில் நடிகர் சூர்யாவை பற்றி பலரும் தன்னிடம் நல்ல விதமாக கூறினர். மிகச் சிறப்பாக உதவி செய்வார்கள் என்றும் தெரிவித்தனர். அதை கொண்டு நான் ஒரு எண்ணத்தை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்ற பிறகு நான் எதிர்பார்த்ததை விட மேல் இருந்தார். அவருடன் இணைந்து நடிப்பது சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன் எனவும் கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
Also read... இன்று மாலை வெளியாகிறது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர்!
அதேபோல் நடிப்பின் மீது தனக்கு ஆர்வம் வருவதற்கு பாலிவுட் நடிகை ஆலியாபட் காரணமாக இருக்கலாம். அவரின் திரைப்படங்களை அதிகம் பார்த்துள்ளேன். சினிமாவில் கமர்சியல் மற்றும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் என இரண்டு வகை படங்களையும் தேர்வு செய்து நடிக்க உள்ளேன். இரண்டிலும் நடிப்பதுதான் தன்னுடைய எண்ணம் எனவும் கூறினார்.
இதுவும் ஆலியாபட்டின் கதை தேர்வில் இருந்து தனக்குள் வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.