கேரளாவில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நடிகை பாவனா, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எதிர்கொண்ட அவமானங்களைப் பற்றி சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
”இது எளிதான பயணம் அல்ல. விக்டிமாக இருந்து சர்வைவராக மாறியதற்கான பயணம். 5 வருடங்களாக, என் மீது சுமத்தப்பட்ட தாக்குதலின் பாரத்தில் எனது பெயரும், எனது அடையாளமும் நசுக்கப்பட்டு வருகின்றன. குற்றம் செய்தது நான் இல்லை என்றாலும், என்னை அவமானப்படுத்தவும், அமைதியாக்கவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்துள்ளன.
ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் என் குரலை உயிர்ப்பிக்க முன்வந்த சிலரை நான் பெற்றிருக்கிறேன். இப்போது எனக்காக ஒலிக்கும் பல குரல்களை கேட்கும் போது, இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை என்பதை உணர்கிறேன். உடன் நின்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி” எனத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பாவனா.
ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி
2017-ஆம் ஆண்டு, வெளிப்புற படப்பிடிப்பு முடிந்து கொச்சிக்குத் திரும்பியபோது பாவனா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது வாகனத்தை வழிமறித்து ஒரு கிரிமினல் கும்பல் அவரை கடத்தியதாக பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.