முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திருச்செந்தூரில் குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் - வெளியான படங்கள்

திருச்செந்தூரில் குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் - வெளியான படங்கள்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமாத்துறை பிரபலங்கள் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் சிவகார்த்திகேயன்

அதேபோல் இன்று பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர் சன்னதி, சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி தட்சிணாமூர்த்தி சூரசம்கார மூர்த்தி ஆகிய சுவாமிகளை தரிசனம் செய்தார்.

திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த சிவகார்த்திகேயன் உடன் அவரது ரசிகர்கள்  புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

செய்தியாளர் - முரளி கணேஷ், திருச்செந்தூர்

First published:

Tags: Sivakarthikeyan, Tiruchendur