முகப்பு /செய்தி /entertainment / அண்ணாமலையார் கோயிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலை மயில்சாமியின் உடலுக்கு அணிவித்த குருக்கள்

அண்ணாமலையார் கோயிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலை மயில்சாமியின் உடலுக்கு அணிவித்த குருக்கள்

மயில்சாமியின் உடலுக்கு அண்ணாமலை கோவில் குருக்கள் அஞ்சலி

மயில்சாமியின் உடலுக்கு அண்ணாமலை கோவில் குருக்கள் அஞ்சலி

Actor Mayilsamy Funeral | மயில்சாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அண்ணாமலையார் கோவிலின் குருக்கள் கோவில் நிர்வாகம் சார்பில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் மயில்சாமியின் உடலுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலை, அணிவிக்கப்பட்டது.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், மயில்சாமி தீவிர சிவ பக்தர் என்பதால் அவரது இல்லத்தில் சிவனடியார்கள், சிவபுராணம் வாசித்து, சடங்குகள் செய்து இறுதி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ஆற்றொணா துயரில் ஆழ்ந்த மயில்சாமியின் மகன்களுக்கும், உறவினர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் மயில்சாமியின் உடலுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலை, அணிவிக்கப்பட்டது. மயில்சாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அண்ணாமலையார் கோவிலின் குருக்கள் கோவில் நிர்வாகம் சார்பில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அண்ணாமலையாரின் தீவிர பக்தர் மயில்சாமி என்றும் உருக்கமாக  குருக்கள் பேசினர். அண்ணாமலையாரின் தீவிர பக்தரான மயில்சாமிக்கு அண்ணாமலையாருக்கு பூஜிக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டதை கண்டு நெகிழ்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Mayilsamy, Tamil cinema news, Tiruvannamalai