நடிகர் அஜித் குமார் தனக்கென வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். பொங்கலை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. அடுத்ததாக அவரது ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிரபல இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து பேட்டி ஒன்றில் வாலி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
வாலி படத்தில் எஸ்.ஜே.சூர்யா எடுக்க திட்டமிட்ட சூழ்நிலை காரணமாக எடுக்கமுடியாமல் போன காட்சி ஒன்றை மாரிமுத்து பகிர்ந்திருக்கிறார். கதைப்படி ஒரே தோற்றம் கொண்ட அண்ணன் - தம்பியாக அஜித் நடித்திருப்பார். இதில் தம்பி மனைவியான சிம்ரனுக்கு அண்ணன் யார் தம்பி யார் என்ற குழப்பம் ஏற்படும்.
இந்த நிலையில் சிம்ரனின் குழப்பத்தைப் போக்க தம்பி அஜித் மீசையை எடுப்பது போலவும், இதனால் குழப்பம் நீங்கும் சிம்ரன் மகிழ்ச்சியில் இருக்க, அண்ணன் அஜித்தும் மீசையெடுத்து இருவருக்கும் அதிர்ச்சியளிப்பது போலவும் எஸ்.ஜே.சூர்யா ஒரு காட்சியை உருவாக்கியிருந்தாராம். ஆனால் அஜித் அந்த நேரத்தில் பிற படங்களில் நடித்துவந்ததால் மீசையை எடுக்க சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது மட்டும் நடந்திருந்தா படம் வேற லெவலில் இருந்திருக்கும் என அஜித் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith