முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு!

ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு!

ஜெய்பீம் படப்பிடிப்பின்போது சூர்யா, இயக்குனர் ஞானவேல்

ஜெய்பீம் படப்பிடிப்பின்போது சூர்யா, இயக்குனர் ஞானவேல்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விருதுகளை குவித்தது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல் மீது காபி ரைட்ஸ் ஆக்ட் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா தயாரித்து நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விருதுகளை குவித்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் உண்மை கதாபாத்திரமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த  ராஜாக்கண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் என்பவர், இயக்குநர் ஞானவேல் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Also read... கேப்டன் பிரபாகரன்: விஜயகாந்த் டூ கேப்டன்... எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமலால் முடியாததை நிகழ்த்திய அதிசயம்

அதில், கொளஞ்சியப்பன் கதாபாத்திரத்தை படத்தில் பயன்படுத்துவதற்காக தன்னிடம் ஞானவேல் அனுமதி பெற்றதாகவும், அதற்காக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் படி, சாஸ்திரி நகர் போலீசார், இயக்குநர் ஞானவேல் மற்றும் படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Surya, Entertainment, Jai Bhim